திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர்சீலியில் சாராயம் தயாரிக்க ஊரல்கள் போட்டிருப்பதாக திருவெரும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு மதுவிலக்கு போலீசார் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியவர்சீலி கிராமத்தில் நடைபெறும் ஊர் திருவிழாவிற்காக அதே ஊரைச் சேர்ந்த அந்தோணி டேவிட் என்பவர் தனது வீட்டின் மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊரல் போட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் சாரய ஊரல் மற்றும் பேரல்களை போலீசார் அழித்தனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க போலீசார் அந்தோணி டேவிட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையெல்லாம் தெரிந்தும் சாராயம் காய்ச்சுவது, ஊரல் போடுவது போன்ற வேலைகளில் சிலர் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *