திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள். குடும்ப அட்டை. முதியோர் உதவித் தொகை, அரசின் நலத் திட்ட உதவீகள். அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 739 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

முன்னதாக திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினருக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.6.03,000/- மதிப்பீட்டிலான பல்வேறு உபகரணங்களையும் தீயணைப்பு துறையினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்