தமிழகத்தில் கடல் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மழை வெள்ள நிவாரண பணிக்காக 260தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் என 300 க்கு மேற்பட்டோர் பேருந்து மூலம் புறப்பட்டு சென்றனர். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் பொன்மலை மண்டல தலைவர் துர்கா தேவி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *