தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நச்சு ஆலை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது ஆலை தரப்பில் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

 மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்டச் செயலாளர் செழியன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே இந்த தீர்ப்பை வரவேற்றும், இந்த வழக்கை உறுதியாக நடத்திய தமிழக அரசும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை பாராட்டியும், மேலும் போராட்டத்தில் உயிர் நீத்த 15 தியாகிகளுக்கு வெற்றியை சமர்ப்பித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 நிகழ்ச்சியில் மக்கள் கலைஇலக்கியக் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா , தோழர் லதா மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணைச் செயலாளர் தோழர் மணலி தாஸ் துணைத் தலைவர் தோழர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், அமைப்பின் வழக்கறிஞர்கள் தோழர் ஆதிநாராயண மூர்த்தி,தோழர் தாஜுதீன், தோழர் கலை,தோழர் ராஜன் பிற வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்