திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்த தேங்காய் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி ஜெயக்குமார் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில் உள்ள சித்தத்தூர் பகுதியில் சுமார் 1/2 ஏக்கரில் உள்ள காலி இடத்தில் கிடங்கு அமைத்து தேங்காய் மட்டைகளை கொட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தேங்காய் மட்டை கொட்டப்பட்ட கிடங்கில் இருந்து திடீரென புகை வந்துள்ளது இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *