திருச்சியில் மண்டல அளவிலான தேசிய மாணவர் படை மாணவியர்களுக்கான சி சான்றிதழ் தேர்வு திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிப்ரவரி 18 19 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இன்று அதற்கான தேர்வினை கர்ணல் சுனில் பட் ,கர்ணல் சந்திரசேகர், கர்ணல் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் 724 மாணவ மாணவிகளுக்கான செய்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வினை நடத்தினார்கள்.

செய்முறை தேர்வில் துப்பாக்கி கையாளும் திறன் வரைபடம் திறன் பயிற்சி போர்க்களத்தில் வீரர்கள் எதிரிகளை கையாளும் திறன் அணிவகுப்பு பயிற்சி தொலைதொடர்பு கருவிகளை பயன்படும் அனுபவம் போன்றவை தேர்வுகளாக நடைபெற்றது,

திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூர் கும்பகோணம் காரைக்குடி திண்டுக்கல் ஆகிய இடங்களில் அதிகாரிகள் முன்னிலையில் தரைப்படை விமானப்படை
மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது, தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி எலிப்பினன்ட் வில்சன்,ஏற்பாடுகள்செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *