திண்டுக்கல்லிருந்து திருச்சி மார்க்கமாக கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் பூங்குடி ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேஜஸ் அதிவேக ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார் . இறந்த நபர் காவிநிற புடவையில் சில்வர் லைன் பார்டர் போட்டதும், மெருன் கலர் ஜாக்கெட் மற்றும் சிவப்பு நிற பாவாடை அணிந்து உள்ளார்.

இறந்த நபரிடம் குளித்தலையில் உள்ள சிவா ரெடிமேட் ஸ்டோர் பை உள்ளது. மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாந்தி 94981 39826 மற்றும் 908056332 மேலும் இறந்தவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *