தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொமுச மத்திய சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு தொமுச மண்டல பொது செயலாளர் குணசேகரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை உருவாக்கி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை வாழ வைத்த கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தொமுச நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மண்டல செயலாளர் ஜோசப் நெல்சன் பேரவை செயலாளர் எத்திராஜ், வெங்காய மண்டி ராமலிங்கம், பி ஹெச் இ எல் சரவணன் மண்டல பொருளாளர் அப்பாவும் மத்திய தொழிற்சங்க துணைத் தலைவர் கண்ணன், கனக சபை, நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்