மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலராஜ் அவர்களின் மகன் தொழிலதிபர் ஜோஸப்லூயிஸ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக திருச்சி ஜென்னிபிளாசாவில் உள்ள முன்னாள் எம்பி அடைக்கலராஜ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜோஸப்லூயிஸ் அவர்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

 இதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் யூத் காங்கிரஸார் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மேலும் கே கல்லுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த பிறந்தநாள் விழாவில் திருச்சி மாவட்டம் சேர்ந்த தொழிலதிபர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்