பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பொறியாளர் இப்ராம்ஷா, கவுன்சிலர் அரவிந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *