திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலம்பாட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஒற்றை கம்பு வீச்சு இரட்டைக் கம்பு வீச்சு வாழ்வீச்சு சிலம்பும் சண்டை அலங்கார வரிசை மான் கொம்பு வேல் கம்பு இது போன்ற பல்வேறு பிரிவுகளில் இப் போட்டி நடைபெற்றது சிலம்பம் உலக சம்மேளனத்தினால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற சிலம்பாட்ட வீராங்கனைகள் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெற்காசியா மற்றும் ஆசிய சிலம்பாட்ட போட்டிகளில் பங்கு பெற வாய்ப்புகள் வழங்கப்பட்டன இந்த தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்தார்,

மேலும் நமது பாரம்பரிய கலையான சிலம்பாட்ட கலையை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும் மேலும் சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும் அயல் நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சங்கர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்