முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி புனித புலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு மாணவர்களுக்கு உணவு வழங்கி அவர்களோடு அமர்ந்து காலை உணவு அருந்தினார். இந்நிகழ்வில் கலெக்டர் சரவணன் மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *