திருச்சியில் கடந்த சில நாட்களாக தி.மு.க.தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு வார்டு மற்றும் பகுதி வாரியாக திமுக சார்பில்‌ பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

பள்ளி வகுப்பறை முன்பு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள்…

இன்று 6,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் திருச்சி ஒத்தக்கடை, தில்லை நகர் பகுதி, வண்ணாரப்பேட்டை , மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு ‌வழங்கப்பட்டது..

இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண் நேரு கலந்து கொண்டு வேஷ்டி, சட்டை, புடவை, துண்டு, காலை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பள்ளி வளாகத்தில் வகுப்பறைகளை மறைத்து மாணவர்களை அவதிக்குள்ளாக்கிய  பிரம்மாண்ட பந்தல் மற்றும் ஒலிப்பருக்கி 

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திமுகவினர், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரம்மாண்ட கட்வுட், பேனர்களை வைத்து இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரிய மிளகு பாறை பகுதியில் பிரதான சாலையை ஒட்டியே கொடிக்கம்பங்களை நட்டு வைத்திருந்தனர்.

பள்ளி வகுப்பறை முன்பு அதிக சத்தத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால் பாடத்தை கவனிக்க முடியாமல் விழாவை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள்…

கருமண்டபம் பொன்னகர் ‌பகுதியில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வகுப்புகள் நடந்த போதிலும், அரசியல்வாதிகள் திரண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தினர்.

பள்ளி மாணவர்களின் படிப்பை பற்றி அக்கறை கொள்ளாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய கவுன்சிலர் ராமதாஸ்…

பள்ளிக்கு வந்த சிறார்கள், அரசியல் வாதிகளின் சொகுசு கார்களையும், நலத்திட்ட உதவிகள் பெற வந்திருந்த மக்கள் கூட்டத்தையும் மிரட்சியுடன் கடந்து சென்றனர்.

பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடந்ததால், வகுப்புகளுக்கு செல்ல சிறுவர் சிறுமியர் மிகவும் சிரமப்பட்டனர். பள்ளி வளாக மைதானத்தில் ஒலிப்பெருக்கி மூலம் திமுக கட்சி பாடல் ஒலிப்பரப்பட்டது இதனால் சிறுவர், சிறுமிகள் வகுப்பறையில் பாடம் கவனிப்பதில் மிகவும் சிரமம் ஏற்ப்பட்டது.

பள்ளி வகுப்பறை முன்பு அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ஸ்பீக்கர்….

தமிழக அரசியல் கட்சிகள் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அரசு பள்ளி வளாகத்தில் எப்படி நடத்தலாம் இது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *