தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்பு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அமுல்படுத்திட வேண்டும், ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியை உயர்வை உடனடியாக உயர்த்தி அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு ஒப்படைப்பை விரைவில் விடுவித்து சரண்டர் ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன்,வரும் 21ஆம் தேதி சென்னையில் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்,

ஒவ்வொரு கோரிக்கையாக விரைவில் நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியவர் தான் கலைஞர் அதே வழியில் தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலினும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதது தொடர்பாக அரசு மீது எங்களுக்கு இருக்கும் கசப்புகள் உரிமையானது. இதில் வேறு யாரும் வந்து குளிர்காய முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்