திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி துரைமுருகன் என்கிற சாட்டை துரைமுருகன் பாரதி ஜனதா கட்சியின் ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யாசிவா மீது புகார் மனு அளித்தார். அந்த மனுவில் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறேன். சாட்டை என்ற வலையொலி youtube சேனலில் நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா என்பவர் வலைதளத்தில் என்னை பற்றி என் மனைவியை பற்றியும் தரைக்குறைவாகவும், கேவலமாகவும் அருவருத்தக்க வகையில் நேர்காணல் அளித்துள்ளார். மேலும் சீமானுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையும் விசாரித்து பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கும் எனவும் தவறான முறையில் நேர்காணல் அளித்துள்ளார். எனவே சூர்யா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *