திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை அரசு, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தில் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், தமிழக அரசு 12 மணி நேர வேலை என்ற தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயத்திற்கு பதிலாக வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *