திருச்சி மெயின் கேட் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் செய்தியாளர் சந்தித்து பேசியது..

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எங்களுடைய இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை பயணம் என்கின்ற பயணத்தை தொடங்கி ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திய பல தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிகரமாக ஓராண்டு நிறைவு செய்தார். அதில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் தேவைகளை கேட்டு அறிந்து அதை பிரதிபலிக்கும் வகையில் அந்தப் பயணம் அமைந்தது. அதனை கொண்டாடும் வகையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் பலகட்ட நிகழ்வுகளை செய்ய இருக்கின்றோம். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாட இருக்கிறோம். அது மட்டுமல்லாமல் இன்று காங்கிரஸ் யூத் கமிட்டி சார்பாக பாரத் ஜோடோ லீடர்ஷிப் என்கின்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றோம். இதில் ஏராளமான பெண்கள் தங்களை ஆன்லைன் மூலம் பங்கேற்க பதிவு செய்திருக்கின்றனர். இதன் நோக்கம் வளர்ந்து வரும் இளைஞர்களை வரும் தேர்தலில் அவரவர்கள் திறமைகளை கண்டறிந்து அதை வெளிப்படுத்தும் வகையில் இதை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பாக பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பூத் கமிட்டி அமைப்பது, மண்டல கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசிய விஷயம் மிகவும் வைரல் ஆகி வருகிறது. சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களுக்கு மோடி உடனடியாக ரியாக்ட் செய்திருக்கிறார். நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், ஒரு தமிழ்நாட்டு அமைச்சர் பேசியதற்கு உடனடியாக பதில் கொடுக்கும் மோடி மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களுக்காக இருக்க வேண்டிய பிரதிநிதிகள் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உடனடியாக அமைச்சர்களை அழைத்து சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்றால் இந்த நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. சனாதனம் என்ற பெயரில் சொன்ன கருத்துக்களை தவறாக எடுத்துக் கொண்டு தவறான பிம்பங்களை ஏற்படுத்துவது சரியானது அல்ல…

மேலும் ஒரு சாமியார் 10 கோடி தரேன் 20 கோடி தரேன் என கூறுகிறார். தமிழ்நாட்டில் நமது காவல்துறை பிறந்தநாளுக்கு கேக் வெட்ட கத்தி வைத்திருந்தால் கூட காவல்துறை கைது செய்கிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்த சாமியார் கூறும் இடத்தில் உள்ள காவல்துறை எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நியாயமாக இருந்திருந்தால் அவரை தற்போது கைது செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இதை பிரபலமாக பேசி அவர் சொன்ன கருத்து உண்மைதான் என்பது போல செய்வது மிகவும் வியப்பாக இருக்கிறது. இதுதான் ஏற்றத்தாழ்வு என்பது எங்களுடைய கருத்து. ஆகவே, உதயநிதியை எளிதாக யாரும் தொட்டு விட முடியாது. அதற்கு அப்பாற்பட்டு தமிழனை யாரும் தொடுவதற்கு அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டோம். வாய் இருக்கிறது என்பதற்காக யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வளவு எளிதாக ஒரு மாநிலத்தின் அமைச்சரும், முதலமைச்சரின் மகனுமான ஒருவரை மிகவும் எளிதாக தலையே சீவி விட்டு வா என்று சொல்பவர்களை பாஜக அரசு ஆதரிக்கிறது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *