திருச்சி பொன்மலை, எம்ஜிஆர் நகர் பகுதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு “பாவை பாவுண்டேஷன் தொண்டு நிறுவனம்” நடத்திய இலவச கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற்று முடிந்தது. இந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேச கற்றல், காகித பூக்கள் தயாரித்தல், காகித அலங்காரங்கள் செய்வது, கையெழுத்து மற்றும் எழுத்து பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பெண்கள் சுயதொழில் தொடங்கும் வகையில் ஆரி வேலைகள், மெழுகுவர்த்தி, பெனாயில் மற்றும் சோப் ஆயில்கள் தயாரிப்பு போன்ற கலைப்பயிற்சிகளை பயின்றனர். நிகழ்ச்சியின் நிறைவுவிழாவில் குழந்தைகள் மற்றும் பெண்களின் படைப்புகளை பார்வையிட்டு, அவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் ஆகியோர் வழங்கினர்.