இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் பிரிட்ஜ் பூசன் சரண் சிங். இவர் பாஜக எம்பியுமாக உள்ளார். பிரஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளையும், பெண்களையும் மத்திய அரசு தொடர்ந்து அடக்கி வருகிறது. பெண்களை பாலியல் தொந்தரவு செய்த பிரஜ் பூசனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களைெ எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *