இந்தியன் இயன்முறை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிசியோதெரபி மருத்துவர் களை டெக்னீசியனாக பதிவு செய்ய வலியுறுத்தக் கூடாது. பிசியோதெரபியை தமிழில் இயன்முறை மருத்துவம் என்றும் பிசியோதெரபிஸ்ட்களை தமிழ் இயன்முறை மருத்துவர்கள் என்றும் வடமொழி கலப்பின்றி தனித்தமிழில் மட்டுமே அரசு ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் குறிப்பிட வேண்டும்.

பிசியோதெரபி கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வி தகுதி பேச்சுலர் ஆஃப் பிசியோதெரபி ஆக நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு மத்திய மாநில அரசின் திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூபாய் 35 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் அரசு இயல் முறை மருத்துவ கல்லூரி பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ள சிகிச்சை என்ற வட மொழி சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும் தமிழ்நாட்டில் செயல்படும் பிசியோதெரபி கல்லூரிகளின் பெயர் பலகைகளில் இயன்முறை மருத்துவக் கல்லூரி என தமிழிலும் அழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பிசியோதெரபி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்