தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் போதிய நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் , அதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக திருச்சி மாவட்ட சாமானிய மக்கள் நலக் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாமானிய மக்கள் நலக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சைனி தலைமை தாங்கினார்.விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் முன்னிலை வகித்தார்.தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் இரமணா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் முனியம்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருப்பு துணி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *