திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் இணைந்து திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பிரைமரி ஸ்கூலில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முனைவர் ஆனந்த் கிதியோன் ஏற்புரை நிகழ்த்தினார்…

பள்ளியின் தாளாளர் போதகர் மணிவண்ணன் ஜெபத்தோடு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முன்னதாக பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியரும் இளையோர் ஜேசிஐ ஒருங்கிணைப்பாளரான பிரசாத் வரவேற்புரை வழங்கினார். இந்த மருத்துவ முகாமில் காவிரி மருத்துவமனையின் மருத்துவர் நிவேதா பள்ளியின் மாணவ மாணவிகளின் காது மூக்கு தொண்டை பொது மருத்துவ மேற்கொண்டார்.

 மேலும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், அப்பகுதி பொதுமக்களுக்கு ரத்த அழுத்த நிலை ஆக்சிஜன் நிலை மற்றும் பொது உடல் பரிசோதனையை செவிலியர்கள் உதவியுடன் மேற்கொண்டார். இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டினை முனைவர் நெல்சன், முனைவர் ராஜேஷ் மற்றும் இளையோர் ஜேசிய் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் செல்வின் மற்றும் இளையோர் ஜேசிய் இயக்கத்தின் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்… இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *