திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக திமுக அரசை கண்டித்து, கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் தாங்கினார். பிச்சமுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் கண்டன முழக்கம் எழுப்பினார். கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு முறையான தண்ணீரை திமுக அரசு பெற்றுத் தரவில்லை. காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதால் விவசாயிகள் நிலம் அனைத்தும் பயிர்கள் கருகி வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள் இதை துளி அளவு கூட மாநில அரசு கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் தனது கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது அவர்களிடம் முறையிட்டோ அல்லது போராட்டங்கள் நடத்தியோ தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட எந்த ஒரு முயற்சியும் திமுக அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டி புதிய தமிழகம் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *