திருச்சி காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் நதிகளை பாதுகாக்க கோரியும், புதிய மணல் குவாரிகளை திறக்க கூடாது என வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் திருச்சி இபி ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேற்கு மாநகர செயலாளர் ரசூல் வரவேற்புரை ஆற்றிட திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் ஜோசப், மாநகர செயலாளர் வீரமணி, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் ஜெயக்குமார் உமா பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் முனைவர் குணசேகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலி கட்சி மத்திய மண்டல ரமணா மக்களின் மைந்தன் சமூக சேவகர் பஷீர் ரெட் பிளாக் கட்சி ராமலிங்கம் திராவிடர் கழக முபாரக் இயற்கை பாதுகாவலர் ஆசிரியர் ரவி தமிழ் புலி கட்சி குயிலி திரைப்பட உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *