பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.என். அருண்நேரு போட்டியிட்டார்‌. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர்
ஆதவ் ப்பளிக் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 24 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலையில் வந்து
389107 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் நடத்தும் பொதுப் பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா விடம் வெற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.

தேர்தல் நடத்தும் அலுவலரும் – மாவட்ட ஆட்சியருமான க.கற்பகம் உடனிருந்தார். அப்போது தி.மு.க. முதன்மைச் செயலாளரும் – நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் , திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள் துரைசாமி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *