திருச்சி மாவட்ட ஆட்சியராக கடந்த 3 ஆண்டுகள் சிறப்பாக பணி புரிந்து தற் போது பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்று உள்ள மதிப்புக்குரிய பிரதீப் குமார் அவர்களை திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து அவருடைய பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்து பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்ற திருச்சி கலெக்டர் பிரதீப் குமாருக்கு சேப் டிரஸ்ட் தலைவரும், சமூக சேவைகியுமான திருநங்கை கஜோல் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்:-
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு குடி மக்கள் நல சங்க தலைவர் கோவிந்தராஜ், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் சேகரன், மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவர் .ஆர்.ஏ. தாமஸ், தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் திருச்சி மாவட்ட செயலாளர் முனைவர். கார்த்திக்,சாலை பயனீட்டாளர் நல குழு அய்யாரப்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.