திருச்சி பொன்மலை ரயில்வே பனிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். 21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டமானது காலை 10:30 மணிக்கு துவங்கி நடைபெற்ற வருகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் முன்னோருக்கும் மேற்பட்டோர் வேலைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ் ஆர் எம் யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் முன்னோருக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *