போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு திருச்சி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும் , முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்,

காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலெட்சுமி கண்ணன்,மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *