போதையில்லா சமூகத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மற்றும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் 250 பேர் பங்கேற்ற மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அல்லி தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் ரபீக் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் அந்தோணிராஜ் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தனர்.
இந்த போதையில்லா சமூகத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு பேரணையானது கல்லூரியிலிருந்து தொடங்கி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக, கரூர் பைபாஸ் சாலை, சிந்தாமணி அண்ணாசிலை வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை சென்று அடைந்தது..