திருச்சி மொராய் ஸ்சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை இணைந்து திருச்சியில் போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி  திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று காலை தொடங்கியது.

 இந்த விழிப்புணர்வு மாறத்தான் போட்டியை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் மொராய்ஸ்சிட்டி உரிமையாளர் லெரொன் மொராய்ஸ், துணை கமிஷனர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாறத்தான் போட்டியானது எம்ஜிஆர் சிலை சாலையில் தொடங்கி கோர்ட் வழியாக பாரதியார் சாலை , தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது.

மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000 , 2ம் பரிசாக 10 ஆயிரம் , 3ம் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 3000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *