தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்துகொண்டு 1,272 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சண்முகம், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் சுரேஷ், மண்டலக்குழுத் தலைவர் துர்கா தேவி, கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் நகர்ப்புற மற்றும் ஊரக புற பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.