மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது .

இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிபிஐ (எம் எல்) மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அவிகிதொச மாநில துணை பொதுச்செயலாளர் வளத்தான், (ஏஜசிசிடியு) மாநில செயற்குழு  இராமச்சந்திரன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில பொதுச் செயலாளர் கோவன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் அன்பு, விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் காவிரி நாடன் வரவேற்புரை ஆற்றினார். பொதுக் கூட்டத்தில் மையமான நோக்கத்தை விளக்கி… மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் திருச்சி செழியன் உரையாற்றினார். பொதுக் கூட்டத்தின் கண்டன உரையாக புரட்சிகர இளைஞர் கழகம் மாநில பொதுச் செயலாளர் தனவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு இந்திரஜித், முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் வழக்கறிஞர் பானுமதி, மக்கள் உரிமை சிவில் கழகம் மாநில செயலாளர் பாலமுருகன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மேலும் கருத்துரை வழங்கியவர்கள் தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மற்றும் அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு. (FASR) தமிழ்நாடு பொதுச் செயலாளர் தியாகு, சிபிஐ (எம்-எல்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் சங்கர், மக்கள் அதிகாரம் தலைமை குழு ராஜு ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி கோவன் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக… மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் கார்க்கி நன்றியுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். இக்கண்டன பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக தோழமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் என நூற்றுக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்