திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

மேலும் இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் குடியிருப்புகள் மத்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடை நிரந்தரமாக மூடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்