திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி இருக்கக்கூடிய காந்தியின் திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

 முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் சண்முகம் வரவேற்புரையாற்றிட மாநில பொதுச் செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம் மாநில ஆலோசகர் ராஜசேகரன் சுப்ரமணியன் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு கலா விளம்பர இலக்க அதிகாரி தேவி பத்மநாபன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அழகர்சாமி மாவட்ட பொதுச் செயலாளர் சட்டையப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் தர்மராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் மில்லிசன் செயற்குழு உறுப்பினர் குழந்தைசாமி உள்ளிட்ட கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பூர்ணம் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர் மேலும் காந்தியடிகளின் பங்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *