மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 11.8 2023 அன்று மசோதாக்களை தாக்கல் செய்தது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்( ஐபிசி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ( ஐ.ஈ.ஏ) ஆகிய மூன்று சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றியமைத்ததோடு வடமொழி தலைப்புகளை வைத்துள்ளது.

இந்த புதிய சட்ட பிரிவிற்கு வரவேற்பு அளித்து பாரதி ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. வழக்கறிஞர் பிரிவு திருச்சி மாவட்ட தலைவர் முத்து மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்