எஸ்ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டார் கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா…… ரயில்வே துறையை தனியார் மயமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை செய்து எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை செயல்படுத்தவில்லை. ஆனால் நேரடியாக தனியார் மயத்தை மேற்கொள்ளாமல் மறைமுகமாக பல நடவடிக்கைகள் மூலம் தனியார் மயம் என்கிற பெயரை மாற்றி தனியார்மயத்தை மேற்கொள்கிறார்கள்.

அதன் காரணமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கேள்விக்குறியாகும் நிலை வருங்காலத்தில் உருவாகும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். அதன்படி தற்பொழுது பென்ஷன் திட்டம் குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு ஒரு ஏமாற்று வேலை புதிய பென்ஷன் திட்டத்தை ஒருபோதும் ரத்து செய்ய மாட்டோம் என அவர்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தெரிவித்து விட்டார்கள். ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

அதன் காரணமாக கோரிக்கைகளை வெவ்வேறு வடிவங்களில் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எங்கள் அகில இந்திய சங்கத்தின் சார்பில் 47 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தோம். அதன்படி தான் தற்பொழுது பென்ஷன் குறித்த ஆராய குழுவை அமைத்துள்ளார்கள். ஆனால் இந்த குழு ஏமாற்று வேலை தேர்தலை கருத்தில் கொண்டு தான் இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்