மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுகந்தி, திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் மோகன், இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பினர் மற்றும் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *