விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின் மூத்த நிர்வாகிகள் போராட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை பிஜேபி நிர்வாகிகளுக்கு தோல்வியில் முடிந்தது.

இதனால், விவசாயிகள் அறிவித்தபடி தலைநகர் டெல்லியில் (13.02.2024) இன்று போராட்டம் நடைபெறுகிறது, மத்திய பிஜேபி அரசு விவசாயிகள் வரும் வாகனங்களை தடுக்க பல்வேறு முள்வேலிகளையும், தடுப்பு சுவர்களையும், இரும்பு தடுப்புகளையும் வைத்து மறிக்கின்றனர். இதேபோன்று, திருச்சியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை, தமிழக காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்தனர்.

இது, ஜனநாயக நாட்டிற்கு எதிரானது, விவசாயிகள் தங்கள் கோரிக்கையை இந்தியாவில் உள்ள எந்த பகுதிகளிலும் போராடலாம் என அரசமைப்பு சட்டம் உரிமை வழங்கியும், அதனை தடுப்பது சர்வாதிகார ஆட்சிபோல் உள்ளது எனக் கூறிய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு. திருச்சியில் போராட்டம் அறிவித்தார், அதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு, மண்டை ஓடுகளை கையில் ஏந்தி, கோவனதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சில விவசாயிகள் பி.எஸ்.என்.எல் டவர் மேல் ஏறி, விவசாய சங்க கொடியை கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தின் உச்சமாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வானில் அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்