திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஜெயில் கார்னர், இந்திரா நகர், மதுரை வீரன் கோவில் தெரு திரு வி க நகர், ஜீவா தெரு, பழைய சகாய மாதா கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சிறைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள நிலங்களை சிறை கைதிகளைக் கொண்டு அளப்பதாக கூறி,

பல ஆண்டு காலமாக இருந்து வரும் குடியிருப்பு வாசிகளின் வீடுகளை இடிக்க முற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொட்டப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சேர்ந்த மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்