குடியுரிமை சி ஏ ஏ திருத்த சட்டத்தின் மூலம் மதசார்பின்மையை சிதைக்கும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இஸ்லாமிற்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தவும், இதன் வழியில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல்.திருமாவளவன் ஆணைக்கிணங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வன், ஆற்றல் அரசு ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் குடந்தை தமிழினி கலந்துகொண்டு கண்டன சிறப்புரையாற்றினார். இதில் மத்திய அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்