திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிப்பர்.

இந்நிலையில் மனு அளிப்பதற்கு முன்பாக மனு எழுதுவதற்காக மக்கள் காத்திருக்கும் இடத்தில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கவுன்டர்கள் முறையாக செயல்படுகின்றனவா, அங்கு காத்திருக்கும் மக்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை, காற்றோட்ட வசதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மின்விசிறிகள் பொருத்தவும், குடிநீர் வசதி கூடுதலாக ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்