மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு

திருச்சி அமமுக மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தில்லை நகர் பகுதி 52 வது வட்ட செயலாளர் ஜான், பகுதி செயலாளர்கள் செல்வம், சதீஷ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்