திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள மாநகராட்சி பொன்மலை கோட்டம் மண்டலம் 4 அலுவலகத்தில் 14வது வாக்காளர் உறுதிமொழி ஏற்பு இன்று நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்பில் மண்டலம் 4 தலைவர் துர்கா தேவி மற்றும் மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் சண்முகம் ஆகியோர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது‌

 இந்த உறுதிமொழியில் கோட்டத் தலைவர் உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் அதில் மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம் இனம் ஜாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலிலும் இன்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்