திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாரந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறைபாடுகளை மக்கள் கோரிக்கை மனுவாக எழுதி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் அளித்து வந்தனர்.

இந்நிலையில் நாளை (05.06.2023) ம் தேதி திங்கட்கிழமை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற இருந்த மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிருவாக காரணத்தால் நடைபெறாது என மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *