சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை இந்திய தேசிய அளவில் “தேசிய ஒற்றுமை நாள்” (National Unity Day)-ஆக கடைபிடிக்க வேண்டி 31.10.2023-ந்தேதி அரசு அலுவலங்களில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நாங்கள் இந்த உறுதிமொழியை ஏற்கிறோம் என்று

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்