திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மாநகர பேருந்து நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை 349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13 ஆம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியது.

இந்த பேருந்து முனைய பணிகள் தற்போது 93 சதவீதம் முடிந்துள்ளது. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2 லட்சம் மக்களை கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்தார் அதில் கூறுகையில்…

எந்தெந்த இலக்காவில் பணிகள் மீது இருக்கிறது விரைவில் செயல்படுத்த வேண்டும், ஏற்கனவே பிப்ரவரி மாதம் முடிக்க வேண்டிய பணிகள் ஏப்ரல் மாதத்திலாவது முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். துறை அதிகாரிகளிடம் பேருந்து இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மார்ச் மாதத்தில் 31 ஆம் தேதி பேருந்து நிலையம் திறப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க பேசி உள்ளேன் என தெரிவித்தார். ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்படும் வரை தற்போது செயல்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படும். உள்ளூர் பேருந்து முழுவதும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவித்தார். திருச்சி மாநகர் பகுதியில் இருக்கும் மத்திய பேருந்து நிலையம் , சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் திமுகவும், பாஜகவும் நாடகமாடுகிறது என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது அவர் என்று சொல்லியவர் வார்த்தையை முடிக்காமல் வேண்டாம் என கூறி அமைச்சர் கே.என்.நேரு கடந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்