புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் முழுவதும் “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டாக்டர் சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை, திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அரை மாரத்தான் போட்டியை நடத்தி வந்தது.

இந்நிலையில் 5 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியானது காலை 7 மணி அளவில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இருந்து துவங்கியது இந்த மாரத்தான் போட்டியை திருச்சி மாநகர் காவல்துறை ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது கோர்ட் ரவுண்டானா, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட், எஸ்ஆர்எம் ஹோட்டல் வழியாக ஜமால் முகமது கல்லூரியில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ₹.3 லட்சம் மொத்த பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 6000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்