மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் ஐந்து பேருந்துகள் மூலம் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

சென்னை செல்லும் துப்புரவு பணியாளர்களை மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.

அருகில் மண்டலத் தலைவர் துர்கா தேவி, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள்,சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *