தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க. சார்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், அமமுக நிர்வாகி தருண் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்