முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்படி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டி மற்றும் உயரம் தாண்டுதல் வாலிபால் போட்டி கபடி போட்டி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 1200 மீட்டர் ஓட்ட போட்டி, குண்டு எறிதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் பள்ளி மாணவிகளுக்கான 100 மீட்டர் ஓட்டு போட்டி கோகோ மற்றும் கபடி போட்டி உள்ளிட்ட போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆறுமுகம் கலந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் விளையாட்டுத் துறை அலுவலர்கள் பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *